1 ـ باب: بر الوالدين

Hadith No.: 2617

2617 - (ق) عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما قالَ: جاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلّى الله عليه وسلّم فَاسْتَأْذَنَهُ في الْجِهَادِ، فَقَالَ: (أَحَيٌّ وَالِدَاكَ) ؟ قالَ: نَعَمْ، قالَ: (فَفِيهِمَا فَجَاهِدْ) .

ஒரு மனிதர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்தார்.அவர்"நான் ஹிஜ்ரத் செல்லவும்,ஜிஹாத் செய்யவும் உங்களிடம் பைஅத் செய்து கொள்கின்றேன்.ஏனெனில் நான் அல்லாஹ்விடம் அதன் கூலியைப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்"என்று கூறினார்.அதற்கு நபியவர்கள் "உமது பெற்றோரில் ஒருவரேனும் உயிருடன் இருக்கின்றனரா?" என்றார்கள்.அதற்கு அவர் "ஆம் இருவரும் இருக்கின்றனர்"என்றார்.அதற்கு நபியவர்கள்"நீங்கள் அல்லாஹ்விடம் அதன் கூலியை எதிர் பார்க்கின்றீர்களா?"என்றார்கள்.அதற்கு அவர்"ஆம்" என்றார்.அப்பொழுது நபியவர்கள் "அப்படியாயின் நீங்கள் உங்கள் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள்"என்று கூறினார்கள்,என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள்அறிவிக்கின்றார்.அன்னாரின் இன்னொரு அறிவிப்பில்"ஒரு மனிதர் ரஸூல் (ஸல்) அவர்களிடம் வந்து ஜிஹாதில் செல்வதற்கு அனுமதி கோரினார்.அப்பொழுது நபியவர்கள் "உங்களின் பெற்றோர் இருவரும் உயிர் வாழ்கின்றானரா?"என்றார்கள்.அதற்கு அவர் "ஆம்" என்றார்.அதற்கு நபியவர்கள் "அப்படியாயின் அவர்கள் இருவரின் விடயத்தில் ஜிஹாது செய்யுங்கள்"என்றார்கள்.என குறிப்பிடப்பட்டுள்ளது

قال تعالى: {وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُوا إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً *}. [الإسراء:23] وقال تعالى: {وَوَصَّيْنَا الإِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْناً *}. [العنكبوت:8]

[خ3004/ م2549]