3335 -
(م) وَعَنْهُ أَيْضاً قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: (إِنَّ اللهَ عزّ وجل يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي. قَالَ: يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعالَمِينَ؟! قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلاَناً مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ، لَوَجَدْتَنِي عِنْدَهُ؟
يَا ابْنَ آدَمَ، اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِي. قَالَ: يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ؟! قَالَ: أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِي فُلاَنٌ، فَلَمْ تُطْعِمْهُ؟ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ، لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِي؟
يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِي. قَالَ: يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعالَمِينَ؟! قَالَ: اسْتَسْقَاكَ عَبْدِي فُلاَنٌ، فَلَمْ تَسْقِهِ، أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ، وَجَدْتَ ذَلِكَ عِنْدِي) .
"ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன்.நீ என்னை நோய் விசாரிக்க வரவில்லை" என்று நிச்சயமாக.மறுமை நாளில் அல்லாஹ் சொல்வான் அதற்கு அவன் "என் இறைவனே!நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது நான் எவ்வாறு உன்னிடம் நோய் விசாரிக்க வருவேன்?"என்று கூறுவான். அதற்கு அவன் "என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்ததை நீ அறிந்திருக்கவில்லையா?அப்போது நீ அவனை நோய் விசாரிக்கச்செல்லவில்லை! நீ அறியவில்லையா நீ அவனை நோய் விசாரிக்க சென்றிருந்தால் நீ அவனிடம் என்னைப் பெற்றுக்கொண்டிருப்பாய்"என்று.கூறுவான்.மேலும் "ஆதமின் மகனே!நான் உன்னிடம் உணவு கேட்டேன்.நீ எனக்கு உணவளிக்கவில்லை"என்று அவன் சொல்வான.அதற்கு அவன் "என் இறைவனே!நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்றபோது நான் உனக்கு எவ்வாறு உணவளிப்பேன்!"என்று கூறுவான்.அதற்கு அவன் "நீ அறியவில்லையா?என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் உணவு கேட்டான்,நீ அவனுக்கு உணவளித்திருந்தால் நீ என்னிடம் அது இருக்கக்கண்டிருப்பாய்!"என்று கூறுவான்.மேலும் "ஆதமின் மகனே! நான் உன்னிடம் அருந்தக் கேட்டேன்.நீ எனக்கு அருந்த தரவில்லை" என்று.அவன் சொல்வான். அதற்கு அவன் "என் இறைவனே! நீ சர்வலோக இரட்சகனாக இருக்கின்ற போது நான் உனக்கு எவ்வாறு அருந்தத் தருவேன்" என்பான்.அதற்கு அவன் "என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் அருந்தக் கேட்டான்,நீ அவனுக்கு அருந்தக் கொடுக்கவில்லை.நீ அவனுக்கு அருந்தக் கொடுத்திருந்தால் நீ அதனை என்னிடம் கண்டுக் கொண்டிருப்பாய்." என்று கூறுவான்"என ரஸூல் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் என அபூஹுரைரை (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்
قال تعالى: {فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا}. [المائدة:48]
[م2569]