நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ பக்ரா (ரலி) கூறுகின்றார்கள் : "இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்''. அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர் (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, ''அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்'' என்று கூறினார்கள்.